"தீதும் நன்றும் பிறர் தர வாரா........"
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2013

பைத்தியக்காரர்களின் நவீனத்துவம்-FACEBOOK

ஒரு பைத்தியம் என்ன செய்யும்,தனக்குத் தானே பேசும்,சிரிக்கும்,அழும்.அது பைத்தியம் என்பதால் நாம் அதை கண்டுகொள்வதில்லை..பைத்தியங்களும் நம்மை கண்டுகொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு மனநிலைதான் பேஸ்புக் பாவிக்கும் பலரின் தற்கால மனநிலையும்!
     எதை எழுதுகிறோம் என்பதில் அவர்களுக்கும் பொறுப்பில்லை.எதை ரசிக்கிறோம் என்பதில் ரசிப்பவர்களுக்கும் ரசனையில்லை.போகிறபோக்கில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு போகிறார்கள்.தனிமையில் நினைக்கும் அந்தரங்கங்களை கூட பொதுவாக பகிர்வதில் உள்ள உள சிக்கல்தான் நம்மை வேறொரு கேடுகெட்ட உலகிற்கு இட்டுச் செல்லும்!
     பிரபலம் எனும் போர்வை ஒருசில ஆயிரம் பேர்களால் போர்த்தப்பட்டதும்,அதில் ஒளிந்து கொண்டு இவ்வுலகை இரட்சிக்க வந்தவர்களாய் இவர்கள் எழுதும் ஆபாசங்களுக்கு அளவே இல்லை!
     எப்பா! பேஸ்புக் இலக்கியவாதிகளே பைத்தியக்காரனாய் இருங்கள்..அது உங்கள் சொந்த உரிமை.ஆனால் பொது இடங்களில் புகையிலையை மென்று எச்சில் துப்பிச் செல்வதைபோன்று ஆபாசங்களை எழுதும் எழுத்து ஜாலத்தை காட்ட சமூக வலைத்தளங்களை நாடாதீர்கள்.!அதில்தான் உங்களுக்கு விருப்பம் என்றால் யாராலும் எங்களை காப்பாற்ற முடியாது!!!

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

வாக்காளர் பட்டியல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும்,அடையாள அட்டை இருப்பவர்கள் தங்கள் பெயர் பட்டியல் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டிய நேரம் இது.கீழே உள்ள நிரலில் சென்று உங்கள் பெயர் உங்கள் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள் 
                                                                            
                                                             www.elections.tn.gov.in/eroll/

புதன், 14 ஆகஸ்ட், 2013

தேசத்தின் முகம்!!!-A Independence Day Special!


காட்சி1:
இடம்: ராணுவ கூடாரம்...!
நாட்டை பாதுகாக்க அந்த நாட்டின் ஏதோ ஒரு எல்லையில் நிறுவப்பட்டிருந்தது...அதில் ஒரு போர்வீரன்..தன் அம்மாவுக்கு அவன் ஒரே மகன்..தந்தை ஏற்கனவே நாட்டிற்காக உயிர் துறந்தவர்..அம்மா  தனிமையில்...மகன் எல்லையில்..நீண்ட நாட்களாக ஆருயிர் அம்மாவை  காண விடுமுறைக்காக காத்திருக்கிறான்..அந்த நாளும் வருகிறது..புறப்பட இன்னும் சில நிமிடங்கள்..திடீரென யாரும் எதிர் பாராத நிலையில் எதிர்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்துகிறது..கடுமையான சண்டை...நிறைய உயிரிழப்பு..

காட்சி 2:ராணுவத்தின் மருத்துவ முகாம்!

போரில் சிதைவுற்றது அவன் முகம்..உடல் நிறைய காயங்களுடனும்..மனதில் தன் அம்மாவை  காணும் ஏக்கத்துடனும் எழுந்து நடக்கவும் திராணியற்று கிடக்கும் அவன் உடல்..நாட்கள் நகர்கின்றன..ஒரு அழகிய நாளில்..அவனையே அவனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள் கண்ணாடியில்...ஆம்! சிதைந்த முகத்திற்கு மாற்றாய் செப்பனிடப்பட்ட புதிய முகம்..முற்றிலும் வேறொருவனாய் தன்னையே தனக்கு உணர வைக்கும் முகம்! அந்த முகத்தில் அவன் தாயை காண அவனுக்கு துளியும் விருப்பமில்லை..ஆனால் அவன் தாயை பார்க்காமலும் இருக்க முடியவில்லை..அவனுக்கு ஒரு யோசனை..நம்மையே நம் நண்பன் என்று சொல்லிக்கொண்டு நம் வீட்டிற்கு சென்று அம்மாவை பார்ப்போம்...ஒருவேளை அம்மா நம்மை கண்டுபிடித்து விட்டால் உண்மையை சொல்லிவிட்டு கடைசி வரை அம்மவுடனே இருந்துவிடலாம்...இல்லையென்றால் பெற்ற அன்னைக்கே அடையாளம் தெரியாத நாம் அங்கிருப்பதை விட வாழ்நாள் வரை இப்போர்களத்திலேயே இருந்து மாண்டு விடலாம் என நினைத்து கிளம்புகிறான்..

காட்சி 3:
இடம்;அவன் வீடு!

கதவு தட்டப்படுகிறது...
அவன் அம்மா வந்து திறக்கிறார்...
”யாரப்பா நீ ” என்கிறார்..கேட்ட மாத்திரத்தில் அவன் கண்களில் நீர் வழிகிறது..மனதை திடப்படுத்திக்கொண்டு ”உங்கள் மகனின் நண்பன்..உங்களை பார்த்து உங்கள் மகன் கொடுத்தனுப்பிய இந்த பணத்தை கொடுத்துவிட்டு...இரண்டு நாட்கள் தங்கி இருந்துவிட்டு செல்லலாம் என உத்தேசம்” என்று கூறுகிறான்! அந்த இரண்டு நாட்களும் அவனுக்கு ராஜ உபசாரம்...மிகுந்த மனத்துயருடனும்,கட்டுக்கடங்காத கண்ணீருடனும் விடைபெற்று போர்க்களம் நோக்கி விரைகிறான்!

காட்சி4:
இடம்:ராணுவ முகாம்
அவன் வந்து சேர்ந்தற்கு பிந்தைய மூன்றாவது நாளில் அவன் தாயிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது...பிரித்து படிக்கிறான்..”மகனே! உன் நண்பன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தான்..எனக்கென்னவோ அவன் நீயாக இருக்குமோ என்று சந்தேகம் இருக்கிறது..நீயாக இருந்தால் தயவு செய்து சொல்லிவிடு” என்று எழுதி இருக்கிறது...”நானே தான்” என்று கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது அவனுக்கு..கடிதத்தை தூக்கிகொண்டு ஓடுகிறான்..கண்ணீர் சிந்தியபடி...இது ஆனந்தக்கண்ணீர்...

காட்சி 5:
இடம்:அவன் வீடு!
ஓடிச் சென்று அவந்தாயை கட்டிக்கொண்டு கேட்டான்
“எப்படியம்மா என்னை கண்டுபிடித்தாய்”
“உன் துணிகளை துவைக்கும் போது அதில் உன் வாசம் வந்ததடா! தாய்க்கு தெரியாதா மகனின் வாசம்”
“என்னை இந்த முகத்தோடு உனக்கு பிடித்திருக்கிறதா?”.என்று கேட்டான்..
அவன் அம்மா சொன்னால்
“இந்த முகத்தோடு தான் உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..இதற்கு முன் உனக்கு இருந்த முகம் நானும் உன் தந்தையும் உனக்கு கொடுத்தது..ஆனால் இப்போதிருக்கும் இந்த முகமோ இந்த ‘தேசம்’ உனக்கு கொடுத்தது..!!!!!!!!!”
                  ஆம் நண்பர்களே! நம்மில் பல பேர் பத்திரிக்கையாளனாகவோ,மருத்துவராகவோ,அரசாங்க அதிகாரியாகவோ,அரசியல்வாதியாகவோ,மாணவனகவோ இருக்கிறோம் அல்லது இருக்க போகிறோம்! நம் சொந்த முகம் மறைத்து..நான் எனும் அகந்தையை விட்டு அகன்று,சுயநலம் பாராது பொதுநலம் பார்த்து,லஞ்சம்,ஊழல் இவை தவிர்த்து வலிமையான தன்னிறைவு பெற்ற,வலிமையான ஒரு தேசம் படைத்திட உறுதி ஏற்போம்..அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

பி.கு: இந்த கதை ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸ் டால்ஸ்டாய் இன் தேசத்தின் முகம் என்ற கதை..சில திருத்தங்களுடன் என் எழுத்தில்..பிழை இருப்பின் மன்னிக்கவும்...
          


UA-43378410-1